Thursday, December 31, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2010

இன்றிரவு, ஆலயம் முழங்கும் 12 மணியளவில்,
தேவர்களின் நாத ஒலியில்
மறு உயிர் ஜனிக்கும் புவியின் பூங்காற்றில்,

ஓ! என்னுயிரே,
ஆழ்ந்த சுவாசத்தின் அமைதியில்
இதயத்தின் இன்னிசையில்
உயிர் எழுதும் பாடல்வரியில்
இனிய புத்தாண்டை எதிர் நின்று வரவேற்று!

இந்த புத்தாண்டு, உன்னை நினைவூட்டுவதற்கு
கடந்த காலத்தின் அனுபவத்தை ஏற்று
உன் புதிய எதிர் காலத்தை செப்பனிட,

இந்த புத்தாண்டு, நீ முரசொலித்து உறுதி மொழியேற்க
நீ காதலிப்பவர்களை காதலிப்பதுடன்
உன் எதிரிகளையும் காதலிக்க,
உன் உற்றார்களுக்கு மன நிம்மதி கொடுப்பதுடன்
உன்னை அறியாதார்க்கும் அமைதி கற்று தர,
உண்மைக்காக பாடுபட, உண்மையான உணர்வுகளை உருவாக்க பாடுபட
இனிய புத்தாண்டை எதிர் நின்று வரவேற்பாயாக!

என் இனிய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

~விஜய்

0 Comments:

Post a Comment

<< Home